Skip to content

கரூர்…. இரத்த தான விழிப்புணர்வு பேரணி

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்த தான விழிப்புணர்வு பேரணி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமார் 800க்கும் மேற்பட்டோர் கையில் பதாகையை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியில் சென்றனர். இப்பேரணியானது அரசு மருத்துவக் கல்லூரி, காந்திகிராமம் வழியாக திருச்சி சாலையில் சென்று மீண்டும் மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே முடிவடைந்தது. இதில் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!