புதுக்கோட்டை பெரியார் ரத்ததான கழகத்தலைவர் எஸ்.கண்ணன். இவர் இதுவரை 172 முறை ரத்த தானம் வழங்கி உள்ளார். ரத்த தானம் வழங்குவதில் இவர் தான் தமிழ்நாட்டில் முதலிடத்தில் உள்ளார். இவரது பொது நலனை கருதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் நடந்த உலக ரத்த தான நாள் விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், புதுக்கோட்டை கண்ணனை பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.