தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். ரங்கராஜன் ஆகிய முன்னிலை வகித்தனர்.
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் சா முரசொலி புதுப்பிக்கப்பட்ட பள்ளி வளாகத்தை நேற்று மதியம் வந்து திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் வேறு இறையன்பு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எல்ஜி என்கின்ற எல் கணேசன் தனது 90 வயதில் சற்கர நாற்காலியில் வந்து தான் பயின்ற பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய இறையன்பு கூறியதாவது : இந்தப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினர். குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் படித்த பள்ளி, அமைச்சராக சிறப்பாக பணியாற்றினர் ( எஸ் டி எஸ் என்கின்ற எஸ்.டி.சோமசுந்தரம்) கவிஞர்களாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக மற்றும் இன்ன பிற துறைகளிலும் சிறந்து விளங்கி உள்ளனர் என்று இந்தப் பள்ளியின் பெருமைகளை எடுத்துக் கூறிய முன்னாள் மாணவர் மருத்துவர் பாலகிருஷ்ணன் கூறினார்.
கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு அதிகபட்சம் 12 சதவீதம் கூட படிப்பறிவு இல்லாத காலகட்டத்தில் இந்த பள்ளி இந்தப் பகுதியில் எவ்வளவு பெரிய
ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கியிருக்க வேண்டும். கல்வி படிப்பு என்பது மாணவர்களுக்கு சமூகத்தின் மீது ஒரு அக்கறையை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் எவ்வளவு படித்தாலும் அது வீண். அலமாரியில் இருக்கும் புத்தகத்தின் மீது சிலந்தி நடந்தது போல தான் அதுவும் என்றார். நூற்றாண்டுகள் கடந்த இந்த பள்ளியில் ஒரு கலையரங்கம் இல்லையே என்று நான் யோசித்தேன். அப்பொழுதுதான் பேசியவர்கள் கூறினார்கள் பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை இந்த பள்ளியில் கலையரங்கம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி உள்ளார் என்று, அதை அதைக் கேட்டு உண்மையிலேயே நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
இது கல்விக்கூடம் அல்ல பலத்துறை வல்லுனர்களை உருவாக்கும் ஒரு இடம், எங்கே ஒரு இடம் பலரை உருவாக்குகிறதோ அது கோவிலாக கருதப்படும். அதே போல் வரும் வழியில் நான் பார்த்தேன் எத்தனை நீர் நிலைகள் எத்தனை குட்டைகள் எத்தனை ஏரிகள் எவ்வளவு பறந்து விரிந்த வயல் பரப்புகள் அத்தனையும் பசுமையாக கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இப்பொழுதே அப்படி இருக்கிறது என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி எவ்வளவு அழகாக இருந்திருக்கும் என பள்ளியையும், அங்கு பயின்ற முன்னாள் மாணவர்களையும் மற்றும் அந்த கிராம மக்களையும் வெகுவாக பாராட்டி நீண்ட உரையாற்றினார்.