வீட்டின் பூட்டை உடைத்து 2 1/2 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் பணம் திருட்டு
திருச்சி கே கே நகர் தங்கையா நகரை சேர்ந்தவர் யோகேஷ் (வயது 32 )இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 1/2 பவுன் தங்க நகை மற்றும் 115 கிராம் வெள்ளி மற்றும் 5 ஆயிரம் பணம் திருட்டு போய் உள்ளது.இது குறித்து யோகேஷ் கே கே நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கம், வெள்ளி, நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
கழிவுநீர் குழாயை திருடிய வாலிபர் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கோரையாற்று அருகில் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் திட்டம் மூன்றின் கீழ் இரும்பு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் அங்கு பதிக்க வைத்திருந்த 100 கிலோகிராம் இரும்பு குழாய் கீழப்பஞ்சப்புரை சேர்ந்த வாசுதேவன் (வயது 24 )என்ற வாலிபர் திருடி சென்று உள்ளார். இது தொடர்பாக இளங்கோவன் என்பவர் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாசுதேவனை கைது செய்துள்ளனர்.
திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது
திருச்சி, மேலப்புலிவார்டு ரோடு இப்ராஹிம் பார்க் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்பொழுது அங்கு மதுரை ரோடு பகுதியை சேர்ந்த அலிசார் (வயது 26) ரசித் உசேன் (வயது 25) ஆகிய இரண்டு பேர் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய இருந்தத்தை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
