சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று காவலர் மீது ஏற்றுவதுபோல அதிவேகமாக கார் ஓட்டிய விவகாரத்தில் மயிலாப்பூரை சேர்ந்த அபிஷேக் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக சென்றதால், காவலர் செல்வம் கொடுத்த புகாரின்பேரில் காரை ஓட்டிய ஐடி ஊழியர் அபிஷேக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு சம்மன் வழங்கி இன்று காலை 10 மணிக்கு ஓட்டுநர் உரிமம், அசல் ஆவணங்கள், காருடன் காவல் நிலையத்தில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தான் நன்றாக கார் ஓட்டுவதாக மனைவி, நண்பர்கள் கூறியதால் அதிவேகமாக காரை ஓட்டியதாக அபிஷேக் தெரிவித்துள்ளார். காரை ஓட்டிய அபிஷேக் மற்றும் அவரது மனைவி நந்தினி மற்றும் மற்றொரு நண்பர் ஆகிய மூவரும் ஐடி ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக அபிஷேக் மற்றும் அவரது மனைவி நந்தினியிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.