Skip to content

அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள்.. இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை…

  • by Authour

அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ .பெரியசாமி, முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோரை ஆகியோரை சிறப்பு கோட்டுகள் சொத்து குவிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் இருந்து விடுவித்து பல்வேறு ஆண்டுகளில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புகளை மறுஆய்வு ஐகோர்ட்டு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து சுப்ரீம் கோர்ட்டு, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முடிவு செய்யலாம் என தீர்ப்பளித்தது. இந்தநிலையில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ .பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை எடுத்த வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று  பிற்பகலில் கடைசி வழக்குகளாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேசே விசாரிக்கலாம் என்று அனுமதி வழங்கி தலைமை நீதிபதி உத்தரவிட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!