Skip to content

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்…டில்லியில் 12ம் தேதி நடக்கிறது

தமிழகம், கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்னை  இருந்து வருகிறது.  தமிழகத்திற்கு இந்த ஆண்டு  தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுத்ததால்,  தமிழக அரசு காவிரி ஆணையத்தில் முறையிட்டதுடன், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.

கடந்த முறை கூடிய காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் அக்டோபர் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை தினமும் தமிழகத்திற்கு  வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்குமாறு ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு  அதன்படி தண்ணீர் திறக்கவில்லை.

இந்த நிலையில் வரும் 12ம் தேதி டில்லியில்  காவிரி ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் அதிகாரிகள்,  கர்நாடக அரசு  தர வேண்டிய தண்ணீர் தர மறுப்பது குறித்து புகார் செய்யும் இதனால் இந்த கூட்டம் காரசாரமாக இருக்கும் என  தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!