Skip to content

சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக 14 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி…

  • by Authour

மத்திய புலனாய்வு அமைப்புகளான சி.பி.ஐ., மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஆகியவற்றை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதாதளம், பாரத ராஷ்டீரிய சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ஐக்கிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, தேசிய மாநாடு உள்ளிட்ட 14 கட்சிகள் கூட்டாக வழக்கு தொடுத்தன. இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வின் முன்பாக மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி முறையிட்டார். அப்போது, மத்தியில் பா.ஜ.க. கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் சி.பி.ஐ., மற்றும் மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தொடுக்கும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2014-க்கு முன்பு, 2014-க்கு பின்பு என்று பார்த்தால் வழக்குகளின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து இருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன என்றார்.
இந்த வழக்கை 5ம் தேதி விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு ஒப்புக்கொண்டது. அதன்படி இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் தலைமையிலான 14 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், மனுவை தள்ளுபடி செய்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!