கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், அமைப்புகள் கண்காணிப்பு குழுவிடம் நேரடியாக மனுக்கள் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், பொதுமக்கள் மனுக்கள் வழங்க ஏதுவாக சாமியான பந்தல் அமைக்கப்பட்டு இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

