தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரங்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. வானிலை மையமும் தமிழகத்தில் மெல்ல அதாவது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என்றே தெரிவித்திருந்தனர். அதற்கேற்ப வெப்பம் அதிகரித்ததால் மதிய நேரங்களில் அசௌகரியமான சூழல் இருந்து வந்தது. இருப்பினும் மாலை நேரங்களில் வெயில் தனித்து ஆங்காங்கே மழை பெய்து வந்தது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பகல் முழுவதும் வெயில், இரவு நேரங்களில் மிதமான மழை என்கிற சூழல் தான் இருந்து வந்தது. நேற்றைதினம் கூட மதியம் வரயில் வெயில் கொளுத்திய நிலையில் , பிறபகலுக்கு மேல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. மேலும், தமிழகத்தில் 28 ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது,
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்குள் 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடுமென கணிக்கப்பட்டுள்ளது.