தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்குள் எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வாரங்களில் இருந்தே மழை பெய்து வருகிறது. மேற்கு திசையில் ஏற்பட்டுள்ள காற்றின் வேக மாறுபாட்டால் இன்று தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர், தேனி. திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.