Skip to content

சென்னைக்கு உறவினர் வீட்டிற்கு சென்ற திருச்சி வாலிபர் மாயம்

  • by Authour

திருச்சி உறையூர் நவாப் தோட்டம் தேவாங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலிலுல் ரகுமான்(வயது 28).இவர் ரஹ்மத்துல்லா என்பவரின் மகளை திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் வெளிநாடு சென்று விட்டார்.இந்த நிலையில் கலிலுல் ரகுமான் சென்னையில் உள்ள தனது உறவினர்களை பார்ப்பதாக கூறி சென்றார் .ஆனால் சென்னைக்கும் செல்லவில்லை. வீட்டுக்கும் திரும்பி வரவில்லை. அதைத் தொடர்ந்து அவரது மாமியார் சாரா பிவி உறையூர் போலீஸ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கலிலுல் ரகுமானை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!