Skip to content

இலங்கை கடற்படை கைது செய்த 22 மீனவர்களை விடுவிக்க கோரி- முதல்வர் கடிதம்..

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது என்றும் பிப்ரவரி முதல் வாரத்தில் விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள் தாயகம் திரும்பவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் எழுதியுள்ளார்.

error: Content is protected !!