முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என்னுடைய டில்லி பயணத்தை, வீம்புக்காக குறை சொல்கிறார் எடப்பாடி. அரைத்த மாவையே அரைக்கிறார். நான் எடப்பாடிக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. ஆட்சியை பற்றி குறைசொல்ல ஒன்றும் இல்லை. நான் வெள்ளைக்கொடி, காவிக்கொடி ஏந்தி டில்லி செல்லவில்லை. எடப்பாடிக்கு பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.