Skip to content

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….. நிகழ்ச்சி விவரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகை தருகிறார்.  இதற்காக  சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.15 மணிக்கு திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு திருச்சி மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அங்கிருந்து அவர் கார் மூலம் திருவாரூர் புறப்பட்டு செல்கிறார். வழியில் அவர் தஞ்சையில் முன்னாள் அமைச்சர்  உபயதுல்லா இல்லம் சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர் திருவாரூர் செல்கிறார்.  மாவட்ட எல்லையான கோவில் வெண்ணியில் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனை ஏற்றுக் கொண்டு  திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள வீட்டிற்கு செல்கிறார்.

மறுநாள் 22-ந்தேதி திருவாரூரில் இருந்து கார் மூலம் மன்னார்குடிக்கு சென்று மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமணத்தை நடத்தி வைக்கிறார். தொடர்ந்து அவர் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு அவர் மீண்டும் சாலை மார்க்கமாக திருச்சி வந்து  விமானம் மூலம் சென்னை செல்கிறார். திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு  திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் மேற்பார்வையில் தஞ்சை டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன்,  திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!