Skip to content

புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் அருணா..

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சி, நாட்டுக்கல் மெயின் ரோடு, துர்கை அம்மன் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் அஜய் யாதவ்  , மாவட்ட ஆட்சித்தலைவர்  மு.அருணா,  தலைமையில் இன்று (12.09.2025) பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று கொண்டு, விவரங்களை கேட்டறிந்து, மனுக்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்)  அ.ஷோபா, மண்டல உதவி இயக்குநர் (தஞ்சாவூர்) சிறுசேமிப்பு செந்தில்குமார், பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!