Skip to content

கல்லூரி மாணவர் தற்கொலை- முதியவர் மயங்கி சாவு… திருச்சி க்ரைம்

மயங்கி விழுந்த முதியவர் பரிதாப சாவு  திருச்சி மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் முதியவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் இறந்துவிட்டார். இது குறித்து கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி கௌதம் பாபு கே.கே. நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் தலைமையிலான கே.கே.நகர் போலீஸ் சார் வழக்குப்பதிந்துஇறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   திருச்சி கல்லூரி மாணவர் தற்கொலை..  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வானதிராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் அன்புமணி (வயது 24 ) .இவர் திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை சண்டிவீரப்பன் கோவில் சந்து பகுதியில் தங்கியிருந்து திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.படிப்பு முடிந்தவுடன் அன்புமணியை வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் அவர் மேல்படிப்பு படிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அன்புமணி தாம் தங்கியிருந்த வீட்டில் உத்திரத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மெக்கானிக்கின் மனைவி திடீர் மாயம் திருச்சி அரியமங்கலம் வடக்கு உக்கடை ஜெய்லானியா தெருவை சேர்ந்தவர் ஹக்கீம் (வயது 51 )..லாரி மெக்கானிக். இவர் கொண்டையம்பேட்டையில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் தனது மனைவி மமுதா சமையல் செய்யாமல் டி.வி பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். உடனே கணவன் திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து சமையல் செய்து, சாப்பிட்டு முடித்துவிட்டு அனைவரும் தூங்க சென்று விட்டனர். காலையில் பார்க்கும்போது மனைவி மமுதாவை காணவில்லை. இது குறித்து ஹக்கீம் அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி சாவு  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். (வயது 45). மருந்து விற்பனை பிரதிநிதி. இவர் உறையூர் பகுதியில் மேன்சனில் அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றார். புத்தூர் நான்கு ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்து போன கிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
error: Content is protected !!