கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி கொல்லங்குளம் பாரதி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செல்வமணி இவரது மகள் சரோன் ஜோசி (வயது 17 )இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் தாயுடன் தனியாக வசித்து வந்த சரோன் ஜோசி மனமடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று விட்டில் இருந்த தாய் துர்கா வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து விட்டில் தனியாக இருந்த சரோன் ஜோசி
அறையில் மின்விசிறியில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயங்கி விழுந்து ஒருவர் சாவு
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 48) இவர் திருச்சி கருமண்டம் கல்யாணசுந்தரம் பகுதியில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் நாகராஜ் நேற்று வீட்டிலிருந்து வெளியே மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து நாகராஜ்யை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.