Skip to content

காங்., தலைவரை வரவேற்று பேனர் வைப்பதில் தகராறு… 3 பேர் கைது…

மயிலாடுதுறைக்கு காங்கிரஸ் கட்யின் மாநில தலைவர் செல்வபெருந்தகை வருகை தந்தார் அவரை வரவேற்று முன்னாள் மகளிர் மாநில மகளிரணி துணைத்தலைவர் மரகதவள்ளியின் பேனரை மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் வைத்திருந்தார், அந்தப்பேனரை மறைத்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரின் பேனரை ஒருசிலர் கட்டினர் இதை மரகதவள்ளியின் மகன் டாக்டர் ராகவகிருஷ்ணன்(24) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன்(20) கோடங்குடி சூரியா, நாசர்அலி(25) மற்றும் அருண்(24)ஆகியோர் ஒன்றுசேர்ந்த ராகவகிருஷ்ணனை திட்டி அடித்துக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர், காயம்பட்ட ராகவகிருஷ்ணன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் அவர் அளித்தபுகாரின்பேரில் 4 பேர்மீது வழக்குப் பதிவுசெய்து சூரியாவை தவிர மற்ற 3 பேரையும் மயிலாடுதுறை போலீசார் கைதுசெய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!