Skip to content

புதிய பாலம் கட்ட… மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இடிப்பு

கடந்தாண்டு மார்ச் மாதம் மலைக்கோட்டை மாரிஸ் மேம்பாலத்தை பாலத்தை விரிவாக்கம் செய்து கட்டுமானப் பணிகளை தொடங்க இந்த வழியிலான போக்குவரத்து முடக்கப்பட்டது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுமானப் பணிகள் மந்தமாகவே காணப்பட்டன. மாநகராட்சி தரப்பில் பணிகளை விரைந்து முடித்தாலும், ரயில்வே நிர்வாகத் தரப்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில், ரயில்வே நிர்வாகத்தின் சார்பில், இருப்புப் பாதை செல்லும் பகுதியில் உள்ள பாலத்தின் கான்கிரீட் கட்டுமானத்தை முழுவதுமாக இடித்தும் அகற்றும் பணி இன்று (13.05.2025) செவ்வாய்க்கிழமை தொடங்கும் என திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்தார்.
அவர் மேலும் மலைக்கோட்டை மாரிஸ் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதமாகி வருவதை ரயில்வே ஆலோசனைக் குழு கூட்டத்தில் பேசினேன். மேலும், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து தொகுதி மக்களின் கோரிக்கைகள் தொடர்பாகப் பேசினேன்.
அப்போது மலைக்கோட்டை மாரிஸ் ரயில்வே மேம்பாலம் குறித்துக் கேட்டதில், இருப்புப்பாதை செல்லும் பகுதியில் உள்ள பாலத்தின் கான்கிரீட் கட்டுமானங்கள் இடித்து அகற்றும் பணி இன்று (13.05.2025 ) செவ்வாய்க்கிழமை தொடங்கும் என ரயில்வே கேட்ட மேலாளர் தெரிவித்தார்.
அதன்படி புதிய பாலம் கட்டும் பணிக்காக மலைக்கோட்டை மாரிஸ் ரயில்வே மேம்பாலத்தை இடித்து அகற்றும் பணி இன்று தொடங்கியது
மேலும், புதிய கட்டுமானப் பணிகளை ஜூன் மாதத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!