Skip to content

பள்ளி மாணவிகள் மூலம் எண்ணப்பட்ட கோவில் உண்டியல் காணிக்கை


ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கையை எண்ணும் தன்னார்வலர்கள் அடுத்தடுத்து திருட்டுச் செயல்களில் ஈடுபட்டதால் இம்முறை பள்ளி மாணவிகள் மூலம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. கடந்த 25 நாட்களில் ஒரு கோடியே 26 லட்ச ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதவிர 20 கிராம் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், 124 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன.

error: Content is protected !!