Skip to content

பென்னாகரம் பட்டாசு குடோனில் வெடிவிபத்து…2 பெண்கள் பலி

பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி என்ற கிராமத்தில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் ஒன்று உள்ளது., இந்த பட்டாசு குடோனில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு குடோனில் வேலைக்கு வந்த 2 பெண்கள் வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்

பட்டாசுகள் வெடித்ததில் பட்டாசு குடோன் தரைமட்டமாகியுள்ளது. இதனால், இந்த சம்பவத்தில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா? என்பது குறித்து மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும், பட்டாசு குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்து நடந்த பகுதிக்கு மக்கள் செல்லவேண்டாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த குடோனில் பட்டாசுகளுடன், கிராமப்புற கோவில்களில்  வெடிக்கப்படும் நாட்டு என்கிற வெடிகளும் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பென்னாகரம் பகுதியில் இதுபோல 10க்கும் மேற்பட்ட பட்டாசு குடோன்கள் உள்ளது.  விபத்தை தொடர்ந்து அனைத்து குடோன்களிலும் போலீசார் மற்றும் வெடிமருந்து நிபுணா்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!