விருதுநகா் மாவட்டம் கரியாப்ட்டி அருகே உளள வடகரை என்ற கிராமத்தில் ஒரு பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை பணி நடந்து கொண்டு இருந்தது. இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது.
இன்று காலை திடீரென இங்கு விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அங்கு பணி செய்து கொண்டிருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல் சிதறி இறந்தனர். தகவல் அறிந்ததும் அங்கு தீயணைப்பு படையினர் வந்து போராடி தீயை அணைத்தனர். இடிபாடுகளை அகற்றும் பணி நடக்கிறது. போலீசாரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.