Skip to content

இந்தியா வெற்றி பெறுமா? பரபரப்பான கட்டத்தில் லீட்ஸ் டெஸ்ட்

  • by Authour
 இந்திய டெஸ்ட்  கிரிக்கெட் அணி 5 தொடர்கள் கொண்ட டெஸ்டில் பங்கேற்க  இங்கிலாந்து சென்று உள்ளது. முதல்டெஸ்ட் லீட்சில்  கடந்த  வெள்ளிக்கிழமை தொடங்கியது.   முதலில் பேட் செய்த இந்தியா 471 ரன்கள் குவித்தது.  அடுத்ததாக பேட் செய்த இங்கிலாந்து அணி 465 ரன்கள்  எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நேற்று முன்தினம் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா   நேற்று  364 ரன்கள் எடுத்து  ஆட்டம் இழந்தது.  முதல் இன்னிங்சில் இந்தியா  6 ரன்கள் அதிகம் பெற்றிருந்த நிலையில்,  371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணிக்கு இந்தியா  நிர்ணயித்தது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்து நேற்று  2வது இன்னிங்சை தொடங்கியது.  6 ஓவர் மட்டும் வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து  விக்கெட் இழப்பின்றி,  21 ரன்கள் எடுத்தபோது 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்று 5ம் நாள் மற்றும் இறுதிநாள்  ஆட்டம்  நடக்கிறது. இன்று  இலங்கை 350 ரன்கள் எடுத்தால் வெற்றி,  இல்லாவிட்டால் இந்தியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது. எனவே இன்றைய ஆட்டம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் சதம் விளாசினர். இதன் மூலம் 364 ரன்களை இந்தியா எட்டியது. முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் என்ற முன்னிலையை இந்தியா பெற்றது. இதனால் இந்த ஆட்டத்தில் 371 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டி வருகிறது. டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஒரே நாளில் 350 ரன்கள் எடுக்க முடியுமா என்ற கேள்வி  எழுந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இந்திய அணி உடனான போட்டியில் 378 ரன்கள் இலக்கை இங்கிலாந்து கடந்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் பர்மிங்காமில் நடைபெற்றது. 2019-ல் லீட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை 1 விக்கெட்டில் வீழ்த்தியிருக்கிறது இங்கிலாந்து. இந்த ஆட்டத்தில் 359 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து  சேஸ் செய்து வெற்றி பெற்றது. எனவே இங்கிலாந்து அணி அந்த தைரியத்துடன் ஆடும். அதே நேரத்தில்  இங்கிலாந்தில்  பும்ரா பந்து வீச்சைத்தவிர மற்ற வீரர்களின் பந்து வீச்சு அவ்வளவாக எடுபடவில்லை. அத்துடன்  முதல் இன்னிங்சில் இந்திய வீரர்களின்  பீல்டிங்   மோசமாகவே இருந்தது. அதே  நிலை இப்போதும் நீடித்தால் இங்கிலாந்து அணியால் வெற்றி பெற முடியும்.  பும்ராவைப்போல மற்ற வீரர்களும் நன்றாக பந்து வீசி,  பீல்டிங்கிலும் நன்றாக கவனம் செலுத்தினால் இந்தியா  வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது. மழை குறுக்கிடாமல் இருந்தால் இந்த போட்டியில் ரிசல்ட் கிடைக்கும் என்பது உறுதி். இந்த போட்டியில் கடந்த 4 நாட்களில் இந்தியா 5 சதங்களையும், இங்கிலாந்து ஒரே ஒரு சதத்தையும்  அடித்து உள்ளது.
 
 
error: Content is protected !!