Skip to content

ரூ.10 லட்சம் அபராதம், தமிழக அரசிடம் செலுத்தினார் சி.வி. சண்முகம்

  • by Authour

தமிழக அரசின் திட்​டங்​களான ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களில் முதல்​வர் ஸ்டாலின் பெயரையோ அல்​லது உயிருடன் வாழும் அரசியல் தலை​வர்​களின் பெயர்​களையோ பயன்​படுத்​தக் கூடாது என தடை கோரி அதி​முக எம்​.பி.​யான சி.​வி.சண்​முகம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி திமுக சார்பில் அனுராதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, பி.வில்சன் ஆகியோர் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில்  முறையீடு செய்தனர். அதையேற்ற தலைமை நீதிபதி, இந்த மனுவை கடந்த 6ம் தேதி விசாரித்தார்.
இந்த நிலையில் இதே போன்ற ஒரு வகர்கை அதிமுக வழக்கறிஞர்  இனியன் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த  ஐகோர்ட், வழக்கு தொடர்ந்த வக்கீல் இனியனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

 

 

error: Content is protected !!