Skip to content

தமிழகத்தில் புயல், மழையால் 6.3லட்சம்ஹெக்டேர் பயிர்கள் சேதம்

தமிழகத்தில் ஏற்பட்ட  பெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் வேளாண் துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:

தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட ‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக 2 லட்சத்து 86 ஆயிரத்து 69 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும்,  73 ஆயிரத்து 263 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன, இதனைத் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக 2 லட்சத்து 25 ஆயிரத்து 655 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 45 ஆயிரத்து 634 ஹெக்டர் பரப்பில் தோட்டக்கலைப்பயிர்களும் சேதமடைந்துள்ளன.

ஆக மொத்தம் இதுநாள் வரை 6 லட்சத்து 30 ஆயிரத்து 621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 2 ஆயிரத்து 906 டன் வேளாண் விளைபொருட்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் பயிர் சேதப்பரப்பு கணக்கீட்டுப் பணியை முடித்து, மாநில பேரிடர் நிவாரணத் தொகையைவிவசாயிகளுக்கு விரைவாக பெற்றுத்தரும் வகையில் அதிகாரிகள் உரிய கருத்துக்களை அரசிற்கு விரைவில் அனுப்பப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!