ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து நான்காம் நாள்; செந்தூர பட்டுடுத்தி நம்பெருமாள் சேவை
அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து நான்காம் திருநாள். அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள் இன்று

நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 4 ஆம் நாளில் – பெருமாள் திருமொழிக்காக
கல் இழைத்த அரைக் கொண்டை சாற்றி ; அதில் சிறிய நெற்றி சுட்டி சாற்றி; மகர கர்ண பத்ரம் அணிந்து ; வைரஅபய ஹஸ்தம் சாற்றி; திருமார்பில் – பங்குனி உத்திர பதக்கம்; அதன்மேல் ஸ்ரீ

மகாலட்சுமி பதக்கம்; மகரி ; கஜலட்சுமி பதக்கம்; அடுக்கு பதக்கங்கள்; தங்க பூண் பவழ மாலை; 2 வட முத்து மாலை; மரகத கிளி பெரிய ஹாரம் , மஞ்சள் வண்ண பீதாம்பர பட்டு அணிந்து; பின் சேவையாக – சிகப்புக் கல் சூர்ய பதக்கம்; புஜ கீர்த்தி அணிந்து சேவை சாதித்தார்.

