Skip to content

துணை முதல்வர் உதயநிதி திருச்சி வந்தார், உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கரூர்  மாவட்டத்தில்  நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  பிரமாண்டமாக செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  துணை முதல்வர் உதயநிதி இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார்.  விமான நிலையத்தில்

அவருக்கு  கரூர் மாவட்ட திமுக சார்பில்  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில்  பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்  அமைச்சர்கள்  கே.என்.நேரு,  மகேஸ், திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின்  கரூர் புறப்பட்டு சென்றார். கரூர்  மாவட்ட எல்லையில் துணை முதல்வருக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

error: Content is protected !!