Skip to content

அரிமளம் காமாட்சி அம்மன் கோவிலில் பால்குடம்- காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

அரிமளம் காமாட்சி அம்மன் ஆலயம் பால்குடம்,காவடிகளுடன் சிவராத்திரி
திருவிழா தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சத்திரம் ஸ்ரீகாமாட்சிஅம்மன்
ஆலய மகாசிவராத்திரியை தொடர்ந்து அரிமளம் விளக்கியம்மன் கோவில் அருகில்
உள்ள வினாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் ,காவடிகள்புறப்பட்டு உடுமலை சுப்பண்ண
சுவாமிகள் வழிநடத்த சத்திரம் ஸ்ரீகாமாட்சிஅம்மன் ஆலயத்தை வந்தடைந்தது‌. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு அம்மன் வெள்ளிக்கரகத்துடன் சத்திரம்கிராமத்தைவளம் வரும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து அக்கினிச்சட்டி ஏந்தி கிராமத்தை வலம்வந்து பக்தர்களுக்கு குறி சொல்லும் நிகழ்வும்
நடைபெற்றது. சிவன்ராத்திரிதிருவிழாவை யொட்டி,உடுமலைப்பேட்டை,பொள்ளாட்சி,அரிமழம், சத்திரம் ,சீகம்பட்டி,மரமடக்கி,ஓனான்குடி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!