Skip to content

திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்றம்- ராமதாஸ் அதிரடி

பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை, குடும்ப விவகாரங்களை வெளிப்படையாக முன்வைத்தார். இந்த சந்திப்பின் போது, பாமகவில் இளைஞர் அணித் தலைவர் பதவிக்கு முகுந்தனை நியமிக்கும் விவகாரத்தில் தாயார் மீது பாட்டில் வீசித் தாக்கினார் அன்புமணி. பாஜகவுடனான கூட்டணிக்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாமக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பவர்களை கட்சிப் பொறுப்பிலிருந்து அடுத்தடுத்து நீக்கிவருகிறார் ராமதாஸ்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்றம் செய்து அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனையடுத்து தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்து புதிய நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர். அதேபோல் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த லோகநாதன் நீக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 மாவட்ட செயலாளர்களையும் நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராக சுரேஷ் என்பவரையும் ராமதாஸ் நியமித்துள்ளார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக கோபிநாத் என்பவரையும் ராமதாஸ் நியமித்துள்ளார்.

error: Content is protected !!