Skip to content

டைரக்டர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்

மதயானைக் கூட்டம், இராவணக் கோட்டம் படங்களை இயக்கியவர் விக்ரம் சுகுமாரன். இவர் நேற்று இரவு  திடீர் மாரடைப்பால் காலமானார். மதுரையில் தயாரிப்பாளாரிடம் கதை கூறிவிட்டு சென்னை திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், சினிமா மீது கொண்ட  தீவிர ஆசையில் சென்னைக்கு வந்துள்ளார். முதலில் 1999 ஆண்டு முதல் 2000 வரை இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ படத்தில் நடிகராக அறிமுகமானார். சசிகுமார் நடிப்பில் வெளியான ‘கொடிவீரன்’ படத்திலும் நடித்துள்ளார்.

விக்ரம் சுகுமாரன்

இதனிடையே கதிர் – ஓவியாவை வைத்து ‘மதயானைக் கூட்டம்’ படத்தை இயக்கினார்.      அறிமுகமான முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சாந்தனுவை வைத்து ‘இராவணக் கோட்டம்’ படத்தை இயக்கினார். மேலும், ‘தேரும் பாரும்’ என்னும் படத்தையும் இயக்கி வந்தார். இந்நிலையில் மதுரையில்  உள்ள ஒரு தயாரிப்பாளாரிடம் புதிய படம் ஒன்றிற்கான கதையும் விக்ரம் சுகுமாரன் நேற்று சொல்லியிருக்கிறார்.

தயாரிப்பாளரிடம் கதை கூறிவிட்டு    சென்னை திரும்புவதற்காக நேற்று இரவு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பேருந்து ஏறும் போது மாரடைப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி விக்ரம் சுகுமாரன் காலமானார். சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

error: Content is protected !!