கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சி மாவட்ட திமுகவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி, செயலாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ், நெசவாளர் அணி செயலாளர் பழனி மணி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமி சுந்தரி, கொள்கை பரப்பு
துணைச் செயலாளர் முரளி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைச்செயலாளர் முனைவர் ஜான், துணைச் செயலாளர் பல்லவி ராஜா, தொழிலாளர் அணி மற்றும் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மாநில, மாவட்ட, தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாவட்ட அனைத்து அமைப்பாளர்கள், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.