Skip to content

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடக்கம்

  • by Authour

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன.

மேற்கண்ட  பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் (2025-2026) சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி, கடந்த 6-ம் தேதி முடிவடைந்தது.  3 லட்சத்து 23 ஆயிரத்து 074 மாணவ, மாணவியர் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திருந்தனர்.

அவர்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். இவர்களிலும் 2 லட்சத்து 26 ஆயிரம் மட்டுமே உரிய சான்றுகளையும் பதிவேற்றி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 11ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

இன்று காலை தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. அதன்படி உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில்  தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

அதன்படி  ஜூலை 7-ம்சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும்.  இது 11ம் தேதி வரை நடைபெறும்.

பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 தொடங்கி ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெறும். இணையதள கவுன்சலிங்  ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்கும்.

145 மாணவ மாணவிகள் 200க்கு 200  கட் ஆப் மார்க் பெற்று முதலிடம் பிடித்தனர்.  இவர்களில் 140 பேர்  மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்.  காஞ்சிபுரம் சகஸ்ரா முதலிடத்தையும், நாமக்கல் கார்த்திகா, அரியலூர்  அமலன் ஆண்டோ ஆகியோர்  2ம் இடத்தையும்,

7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் கடலூரைச் சேர்ந்த தாரணி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்”  சென்னை மைதிலி 2ம் இடமும், கடலூர் முரளிதரன் 3ம் இடமும் பிடித்தனர்.

இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.

 

error: Content is protected !!