இனி ஒவ்வொரு ஆண்டும் மகளிருக்கு கோடைகால சிறப்பு தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் இவ்வாறு பதில் அளித்துள்ளார். கோடைகால சிறப்பு தொகை ரூ.2 ஆயிரம் உள்பட ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகையாக அண்மையில் வரவு வைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

