Skip to content

கடல் போல் காட்சியளிக்கும் விலை நிலங்கள்… நீரில் மூழ்கிய பயிர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,466 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நாற்று நடவு செய்து 15 நாட்களே ஆன இளம் சம்பா – தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பல்வராயன் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான விளைநிலங்கள் கடல் போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து மழை

பெய்து வருவதால் இடுப்பளவு தண்ணீரில் நாற்று நடவு செய்து 15 நாட்களே ஆன இளம் சம்பா – தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இப்பகுதியில் வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வராதால் மழைநீர் வடியாமல் விளைநிலங்களில் தேங்கியிருப்பதாகவும், மழை நீர் தொடர்ந்து தேங்கி இருப்பதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!