Skip to content

கட்டிப்பிடித்த மாமனார்..மருமகள் தீக்குளித்து தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பெருநாழி அருகே உள்ள வீரமாச்சான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (32). இவரது கணவர் முனீஸ்வரன்(35). இவர்கள் இருவரும் வீரமாச்சான்பட்டியில் வசித்து வந்த நிலையில் ரஞ்சிதாவின் மாமனார் அண்ணாதுரை (65) கடந்த 21ஆம் தேதி ரஞ்சிதாவை தவறான நோக்கில் பின்புறமாக கட்டிப்பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சிதா, இதுகுறித்து அவரது கணவர் முனீஸ்வரன் இடம் கூறியுள்ளார். இதனை அறிந்த மாமனார் அண்ணாதுரை திருப்பூர் தப்பிச் சென்றுள்ளார்.

கணவர் முனீஸ்வரன் தனது தந்தை வந்த பிறகு இது பற்றி விசாரித்துக் கொள்ளலாம் என கூறியதை அடுத்து ரஞ்சிதா தனது கணவர் விசாரிக்காமல் மலுப்பலாக பதில் சொல்லுகிறார் என்று ரஞ்சிதா நேற்று மதியம் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். 80 சதவீத தீக்காயங்களுடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரஞ்சிதா இன்று மதியம் உயிரிழந்தார். ரஞ்சிதா உயிரோடு இருக்கும்போது அவர் தனது மாமனார் அண்ணாதுரை தன்னை பின்புறம் கட்டிப் பிடித்ததாக வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இதனை அடுத்து பெருநாழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணாதுரை கமுதி தெற்கு ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் ஆக உள்ளார். இறந்த பெண்ணுக்கு 11 வயதில் மகளும், 9 வயதில் மகனும் உள்ளனர்.

error: Content is protected !!