Skip to content

திருச்சி ஆசிரியருக்கு சரமாரி அடி…. பைனான்ஸ் அதிபர் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம்  மேலூர் ரோட்டை  சேர்ந்தவர்
ராமச்சந்திரன் (52)இவர் திருச்சியில்  ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  ராமச்சந்திரன் சீனிவாசன் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி ( 52) என்ற பைனான்ஸ் அதிபரிடம் ரூபாய் 3 லட்சம் பணம் கடன் வாங்கி இருந்தார்.கடந்த மூன்று மாதமாக ராமச்சந்திரன் வட்டி பணம் தராமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ராமச்சந்திரன் உறையூர் சாலை ரோட்டில் உள்ள பைனான்ஸ் அலுவலகத்திற்கு சென்று சத்தியமூர்த்தியிடம் பணம் தருவது தொடர்பாக பேசி உள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பைனான்ஸ் அதிபர் சத்தியமூர்த்தி மற்றும் அவரது ஆட்கள் பாட்ஷா, ராகேஷ் ஆகியோர் ராமச்சந்திரனை பிவிசி பைப்பால் தாக்கி கடுமையான வார்த்தையால் திட்டி உள்ளனர்.இது குறித்து ராமச்சந்திரன் உறையூர் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைனான்ஸ் அதிபர் சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மேலும் பாட்ஷா ,ராகேஷ் ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!