Skip to content

சிட்டி யூனியன் வங்கிக்கு அபராதம் – திருவாரூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவு

திருவாரூரை சேர்ந்த பாண்டியன் என்பவர்  சிட்டி யூனியன் வங்கியின் ரூபே டெபிட் கார்டு பயன்படுத்திவந்தார்.  இவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். விதிமுறைகளின்படி   டெபிட் கார்டு உரிமையாளர் விபத்தில் சிக்கி இறந்தால் ரூ.5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம். ஆனால் அவர் இறப்பதற்கு 45 நாட்களுக்குள் டெபிட் கார்டை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பது நிபந்தனை. 45 நாட்கள் என்பதை வங்கி  , டெபிட் கார்டு  வழங்கிய நிறுவனம் 30 நாட்களாக குறைத்து விட்டது.  இறந்து போன பாண்டியன்  30 நாட்களுக்குள் டெபிட் கார்டை பயன்படுத்தவில்லை.  எனவே  அவருக்கு இழப்பீடு வழங்க முடியாது என   சிட்டி யூனியன் நிர்வாகம்  இழப்பீடு வழங்க மறுத்து விட்டது. இதை எதிர்த்து திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில்  பாண்டியன்   மனைவி நிலா வழக்கு தொடர்ந்தார். 45 நாள் என்பது 30 நாளாக குறைக்கப்பட்ட விவரத்தை  வாடிக்கையாளருக்கு  வங்கி மற்றும் டெபிட் கார்டு நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை.  விதிமுறைகளை மாற்றியதை தெரிவித்திருக்க வேண்டும். தெரிவிக்காத காரணத்தால்  வாடிக்கையாளர் குடும்பத்துக்கு காப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம், நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம், வழக்கு செலவுக்காக ரூ.10,000 வழங்க சிட்டி யூனியன் வங்கி, டாட்டா AIG இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு  திருவாரூர்  நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவி்ட்டது.  
error: Content is protected !!