டெல்லியில் சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாதது, சிக்னல் விதி மீறல், அதிவேகம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 13 வகையான சிறிய விதிமீறல்களுக்கு அபராதத்தை முழுமையாக தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த தள்ளுபடி, தேசிய லோக் அதாலத் மூலம் வரும் 13ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும், அபராதத்தை முழுமையாகவோ அல்லது 50% வரை குறைக்கவோ அம்மாநில போக்குவரத்து போலீஸ் வழிவகை செய்துள்ளது. இந்த நடைமுறை தமிழ்நாட்டில் இன்னும் அமலுக்கு வரவில்லை என்றாலும் இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.