அரியலூரில் பழைய இரும்பு குடோன் தீப்பற்றி எரிந்ததில் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு பின்புறம் கார்த்திகேயன் என்பவர் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் குடோன் வைத்துள்ளார். கடந்த நான்கு வருடங்களாக பழைய இரும்பு பொருட்களை வாங்கி இங்கு சேகரித்து பின்பு விலையில் விற்று வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலையில் இந்த குடோனில் இருந்து கரும்புகைய எழந்ததால் அவ்வழியே சென்றவர்கள் காவல்துறைக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அரியலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ
இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோன் முழுவதும் இரும்பு தகடுகளால் தடுக்கப்பட்டிருந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் எடுத்து நான்கு புறமும் தகர சீட்டுகளை உடைத்து அதன் பின்னர் தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்கும் பணிகள் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சுமார் 5 லட்சம் மதிப்பில் உள்ள பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலும் சாம்பலானது. வழியே சென்ற நபர்கள் யாராவது தான் பிடித்த சிகரெட் துண்டை உள்ளே எரிந்ததால் தீப்பற்றி எரிந்ததா அல்லது திட்டமிட்டு யாராவது உள்ளே சென்று தீ வைத்தார்களா என்பது குறித்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

