Skip to content

குளித்தலை அருகே பணம் வைத்து சூதாட்டம்… 40 பேர் கைது…. 15 டூவீலர் பறிமுதல்..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஆர்ச்சம் பட்டியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் பணம் வைத்து சூதாடி வருவதாகவும், மேலும் ஆர்ச்சம்பட்டி பகுதியில் சூதாடுவதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பைக்குகள் மற்றும் கார்களில் நபர்கள் வந்து செல்வதாகவும், இதனால் அப்பகுதியில் அடிக்கடி இடையூறுகள் ஏற்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் கரூர் மாவட்ட எஸ் பி ஃபெரோஸ்கான்

அப்துல்லா குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன் பேரில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் கரூர் மற்றும் திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் அங்கு சென்ற சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய 40 பேரை போலீசார் கைது செய்து தோகைமலை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த 15 பைக்குகள் ஒரு கார், ஆட்டோ மற்றும் ரூபாய் இரண்டு லட்சம் பணத்தினை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!