திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடியத்தூர் பகுதியை சேர்ந்த திருப்பதி (53) இவர் திரியாலம் ஐந்து வருடத்திற்கு மேலாக பகுதியில் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அடியத்தூர், திரியாலம், உள்ளிட்ட பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பட்டாசு குழுவினர்கள் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 11ம் தேதி உரிய அனுமதியில்லாமல் 5 டன் பட்டாசுகளை திரியாலம் உள்ள குடோனில் இறக்கியுள்ளார் இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் காஞ்சனா மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும் உரிமையாளர் திருப்பதியை கைது செய்த நிலையில் நேற்று இரவு ஜாமீன் கிடைத்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு யாருக்கும் தெரியாமல் சீல் வைக்கப்பட்ட குடோனின் சீலை உடைத்து உள்ளே இருந்த பட்டாசுகளை மற்றொரு குடோனுக்கு மாற்றி வந்துள்ளார். அப்போது ஜோலார்பேட்டை போலீசார் ரோந்து
பணியில் இருக்கும் பொழுது பட்டாசுகள் மற்றொரு குடோனுக்கு மாற்றப்படுவதை அறிந்து திருப்பதி மற்றும் அவருடைய மகன்களை பிடித்தனர்.
பின்னர் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் காஞ்சனா மற்றும் அதிகாரிகள் மற்றும் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர் பட்டாசு குடோனுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் சீல் உடைக்கப்பட்டு பட்டாசை மற்றொரு குடோனுக்கு மாற்றியதன் காரணமாக உரிமையாளர் திருப்பதி மற்றும் அவருடைய மகன்களான சக்திவேல், பிரபு, லோகேஷ், உறவுக்கார பையன் சதீஷ்குமார், உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஈச்சர் லாரி மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து பட்டாசு குடோனுக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பையும் மின்துறை அதிகாரிகள் துண்டித்தனர். அனுமதி இல்லாமல் ஐந்து டன் பட்டாசுகளை இறக்கியது மட்டுமல்லாமல் உரிமையாளர் கைதாகி ஜாமில் வந்த அடுத்த சில மணி நேரத்தில் அதிகாரிகள் வைக்கப்பட்ட சீலை உடைத்து உள்ளே இருக்கும் பட்டாசுகளை மற்றொரு குடோனுக்கு மாற்றி திரும்பவும் கைதான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..