Skip to content

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி மாணவர்களை மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு

பொள்ளாச்சி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளை மேளதாளத்துடன் வரவேற்பு அளித்த அரசு பள்ளி ஆசிரியர்கள். பொள்ளாச்சி-ஜூன்-2 பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2025 – 26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. புதியதாக பள்ளிகளில் சேர்ந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை மேல தாளங்களுடன் வரவேற்றனர். பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை புதியதாக சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும், வண்ண பலூன்களை குழந்தைகளின் கைகளில் கொடுத்தும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தலையில் தொப்பி அணிவித்து பறைஇசை முழங்க ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளி வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி மாணவ மாணவிகள் உயர்நிலைப்பள்ளி அடைந்ததும் அவர்களை வரவேற்கும் விதமாக மாணவர்கள் பள்ளியின் நுழைவாயில் இருந்து பள்ளி வரை வரிசையாக நின்று கைகளை தட்டி அவர்களை வரவேற்றனர் கல்வி ஆண்டின் முதல் நாளில் தங்கள் குழந்தைகளை பள்ளியில் விட வந்த பெற்றோர்கள் முன்பாக குழந்தைகளுக்கு மாலை அணிவித்து அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்ச்சி பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது பள்ளி குழந்தைகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .
error: Content is protected !!