Skip to content

திருச்சியில் அரசு பஸ்சை மறிக்க முயன்றதால் பரபரப்பு….

அதானி குழுமத்தின் பங்கு சந்தை மதிப்பு குறைவால் அதில் முதலீடு செய்து வீழ்ச்சி அடையும் எஸ்.பி.ஐ மற்றும் எல்.ஐ.சி நிறுவனத்தை காப்பாற்ற மத்திய அரசை வலியுறுத்தியும் கண்டித்தும் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென அவ்வழியாக வந்த அரசு பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட முயன்றனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!