Skip to content

அலுவலகம் போன்று உருவாக்கப்பட்ட ரயில் பெட்டி……முதல்வர் ஸ்டாலின் பயணம்

கள ஆய்வில் முதல்வர்’  என்ற திட்டத்தை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு  நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து ரயிலில் இன்று வேலூர் சென்றார். இதற்காக அவர் பயணம் செய்த ரயில் பெட்டியில் ,  ஆய்வுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. அவர் பயணித்த  பெட்டியே அலுவலகமாக  உருவாக்கப்பட்டது.  கான்பரன்ஸ் ஹால் உள்பட பல்வேறு வசதிகள் அந்த பெட்டியில் செய்யப்பட்டு இருந்தது. முதல்-அமைச்சருடன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத்,

சண்முகம் ஆகியோரும் முதல்-அமைச்சருடன் ரெயிலில் பயணம் செய்தனர். ரயில் பயணத்திலேயே   புதிய திட்டங்கள், குறித்து  தலைமைச்செயலாளர் உள்ளிட்ட  அதிகாரிகளுடன் ஆலோசித்தவாறு முதல்வர் பயணித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!