Skip to content

கோவையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.70லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் வேலந்தவலத்தில், போதை பொருள் தடுப்பு போலீசார் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த  இரு  டூவீலர்களை தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். அந்த வாகனங்களில் 3 பேர் இருந்தனர்.  அவர்கள் கோவையை சேர்ந்த சாகர், மணிகண்டன் மற்றும் சந்தீப் ஆவர்.

அவர்களுடைய  செயல்பாட்டில் சந்தேகமடைந்த போலீசார் மூவரையும் சோதனைபோட்டனர். அப்போது அவர்களிடம்  ரூ.70 லட்சம் ரொக்கம், 200 கிராம்

தங்கம்  ஆகியவை இருந்தது. அதற்கான சரியான கணக்குகள் இல்லை என்பதால் போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

ரூ.70 லட்சம் ரொக்கத்தை அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட் உடைகளில் மறைத்து வைத்திருந்தனர். அதையும் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்து விட்டனர். இந்த பணமும்,  தங்கமும் ஹவாலா பணம் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் யாருக்காக ?  அவற்றை  கொண்டு செல்ல முயன்றார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான 3 பேரும் கூலிக்காக  பணத்தை எடுத்து வந்தவர்களாக இருக்கலாம் என  போலீசார் கருதுகிறார்கள்.

error: Content is protected !!