கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் சோலையார் பிர்லா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதோடு நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது இந்நிலையில் நேற்று இரவு காற்றுடன் பெய்த கனமழையால் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் புது தோட்டம், பகுதியில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை காவல்துறை பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி பொக்குவரத்தை சீர் செய்தனர் மேலும் கடந்த ஐந்து தினங்களாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருந்த நிலையில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
