தமிழகத்தில் 4 மாவட்டகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நவ.29ல் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், புதுச்சேரி மாவட்டங்களிலும் நவ.29ல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் சனிக்கிழமை மிக கனமழை பெய்யக்கூடும்.

