தமிழகத்தில் தனியார் நிறுவன ஊழியரைக் கடத்தி ரூ.20 லட்சம் பறிக்க முயன்ற விவகாரத்தில் கைதான வருமான வரித்துறை ஊழியர்கள் மூவர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வழிப்பறி செய்யப்பட்ட பணத்தை உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவு அளித்துள்ளது.

