Skip to content

புதிய பாராளுமன்றத்தில் 1000 இருக்கைகள் போடப்பட்டது ஏன் ?…. செல்வப்பெருந்தகை கேள்வி

ஜி.எஸ்.டி தொகையை சமமாக வழங்க முடியாதவர்கள், தொகுதி மறுசீரமைப்பை எப்படி ? சமமாக வழங்குவார்கள் – காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை !!!

மறுசீரமைப்பு பாதிப்பு இல்லை என்றால் புதிய பாராளுமன்றத்தில் கட்டிடத்தில் ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டது ஏன் ? – கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க விற்கு செல்வா பெருந்தகை கேள்வி !!!

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது :-

தமிழ்நாட்டு மக்களின் உழைப்பை உறிஞ்சும் பா.ஜ.க அரசு, பா.ஜ.காலும் வேறு மாநிலங்களுக்கு நிதி உதவி கொடுக்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்களின் வியர்வையையும் ரத்தத்தையும் உறிஞ்சும் பா.ஜ.க அரசு, பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை.
தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு மாநிலம் போல நடத்துவதில்லை. எல்லோரும் பயம் காட்டுகிறார்கள் எனக் கூறுகிறார்கள்.. மக்களை நீங்கள் பதற்றத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள். அதற்காகத்தான் இந்த முருகன் மாநாடு போன்றவை நடத்தப்படுகிறது. ஏற்கனவே நம்முடைய இந்து அறநிலையத் துறை சார்பாக முருகன் மாநாடு நடத்தப்பட்டது. இவர்கள் நடத்த வேண்டிய தேவை இப்போது என்ன இருக்கிறது? வேண்டுமென்றால் இவர்களுடைய மாநாட்டை குஜராத் உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் நடத்தலாமே?. அதுதான் சமத்துவம்.. அதுதான் கடவுளை சமமாக பார்க்கிறோம் என்ற செய்தியாக இருக்கும். ஆனால் அரசியல் செய்து மக்களை அச்சத்தில் வைத்து இருக்கிறார்கள். இது வட மாநிலங்களில் எப்படி கலவரத்தை தோண்டினார்களோ அதே போன்று தென் மாநிலங்களிலும் தூண்ட நினைக்கிறார்கள்.

மறு சீரமைப்பு குறித்த கேள்விக்கு,

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் முதல்வர்களை அழைத்து மறு சீரமைப்பு குறித்து, என்ன ஆபத்து காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை தெளிவாக கூறியிருக்கிறார். தென்மாநிலங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பா.ஜ.க இறங்கி இருக்கிறது..
நாடாளுமன்றத்தில் எவ்வளவு இருக்கைகள் இருக்கின்றன, ஆயிரம் இருக்கைகள் போட வேண்டிய தேவை என்ன இருக்கிறது. ஆயிரம் இருக்கைகள் போட்டு இருக்கிறார்கள் என்றால் அதன் உள்நோக்கம் என்ன?.. இதெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் தெரியவில்லை, முதல்வர் ஸ்டாலினுக்கும் தெரியவில்லை. வராததை வருகிறது என பூச்சாண்டி காட்டுவதாக எடப்பாடி செல்கிறாரே.. ஆயிரம் இருக்கைகள் எதற்காக போட்டு இருக்கிறார்கள்? காரணம் என்ன?. ஆயிரம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவா?.. 545-க்கு பதில் ஆயிரம் என்றால், தமிழ்நாட்டினுடைய பிரதிநிதித்துவம் எங்கு இருக்கும்.. இப்பொழுது நாடாளுமன்றத்தில் பத்து நிமிடங்களுக்கு மேல் பேச முடியவில்லை. ஆயிரம் வந்து விட்டால் இரண்டு நிமிடம் கூட தமிழ்நாடு சார்பாக பேச கிடைக்காது. இதையெல்லாம் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரிதல் இல்லையா ? இல்லை புரிந்து கொண்டு இப்படி பேசுகிறாரா ? என தெரியவில்லை. நிச்சயம் பா.ஜ.க இப்படித் தான் பேசுவார்கள். அவர்களுடைய வேலை திட்டமே மக்களை திசை திருப்புவது தான். மக்களுக்கு உண்மைக்கு புறமான செய்திகளை கொடுப்பது. நாங்கள் தெளிவாக சொல்கிறோம் மறு சீரமைப்பு என்பது, பா.ஜ.க திட்டமிட்டது போல் நடந்தால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும். தென்னிந்தியா பாதிக்கப்படும். வடமாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்தே தீர்மானித்து விடுவார்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு,

நாங்கள் உடனே நடத்துங்கள் என்று கூறுகிறோம் நாங்கள் எதையும் திசை திருப்பவில்லை. எதற்கு ஓராண்டு இரண்டு தள்ளி போடுகிறீர்கள். மத்திய அரசிடம் தான் புள்ளியியல் துறை இருக்கிறது. மாநில அரசு சென்சஸ் நடத்தலாம் சர்வே நடத்த முடியாது. இதை நிச்சய மத்திய அரசு உடனே நடத்த வேண்டும்.

ஐ.பி.எல் கொண்டாட்ட விபத்து குறித்த கேள்விக்கு,

பாதுகாப்பு குறைபாடு இருந்ததாகத் தான் கர்நாடக அரசு கமிஷனரை தற்காலிக பணி நீக்கம் செய்து இடமாற்றம் செய்து உள்ளது. குறிப்பாக சொல்ல போனால் முதல்வர் சித்தராமய்யாவின் செயலாளரையே மாற்றி இருக்கிறார்கள். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அமித்ஷா வருகையை குறித்த கேள்விக்கு,

தமிழ்நாட்டில் ஏதாவது ? குழப்பம் செய்யலாமா என சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை எல்லோருக்கும் தெரியும். ஒரு போதும் பாஜகவுக்கும் ஆர் எஸ் எஸ் க்கும் தமிழ் மண்ணில் இடம் இல்லை.

மாநில அரசும் மத்திய அரசும் இப்படியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு,

யாரும் சண்டை போடவில்லை, எங்களுக்கான உரிமையை தான் கேட்கிறோம். எங்களுடைய உரிமை தொகையை கொடுங்கள் என்று தான் கேட்கிறோம். ஜி.எஸ்.டி செலுத்துவதில் மூன்றாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. ஆனால் எங்களுடைய உரிமை தொகை குறைவாக கொடுக்கப்படுகிறது. பேரிடர் பாதிப்பு வந்த மாநிலத்திற்கு கொடுக்காமல் வராத மாநிலத்திற்கு கொடுக்கிறீர்கள். பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய 2000 கோடி தொகையை கொடுக்க மறுக்கிறீர்கள். இது போன்ற உரிமை கேள்வியை மட்டும் தான் கேட்கிறோம். தமிழ்நாட்டுக்கு அவர்கள் துரோகம் செய்து கொண்டே இருப்பார்கள் மாண்புமிகு முதல்வர் இதை கேட்காமல் வாயை மூடிக் கொண்டு இருப்பார் என நினைக்கிறார்களா?..
ஒன்றிய அமைச்சர் முருகன் பதவிக்கு வந்தார், தமிழ்நாட்டிற்கு தேவையானவைகளை அவர் தானே பேசி பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் அவர் கேட்பதில்லை. பா.ஜ.க தலைவர்கள் ஏன் ? தமிழ்நாட்டில் நலனுக்காக குரல் கொடுப்பது இல்லை?. இதுதான் பா.ஜ.க விற்கு மற்ற கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்.

error: Content is protected !!